shadow

சென்னை புளியந்தோப்பில் 50க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் நள்ளிரவில் அதிரடியாக சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கொலை கொள்ளை வழக்குகளில் கடந்த 5 ஆண்டுகளில் தொடர்புடைய ரவுடிகளின் வீடுகளை உடனடியாக கண்காணிக்க வேண்டும் என காவல் துறை இயக்குனர் நேற்று உத்தரவிட்டார்

இந்த உத்தரவின் அடிப்படையில்தான் நேற்று நள்ளிரவில் விடிய விடிய சோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.