shadow

கமல்ஹாசனை கைது செய்ய அதிமுக கூட்டணி கட்சி போலீசில் புகார்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக அரசியல் மற்றும் சமுதாய பிரச்சனை குறித்து ஆக்கபூர்வமான பதிவுகளை தனது டுவிட்டரில் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, ‘People of Tamizhnadu, Welcome your respective MLAs with the respect they desrve back home என்று பதிவு செய்திருந்தார்.

இந்த கருத்து வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாகவும், இதற்காக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று அதிமுக கூட்டணி கட்சியான ‘அகில இந்திய தேசிய லீக்’ கட்சி தெரிவித்துள்ளது.

இந்த புகாரின் மீது காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply