shadow

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரது சகோதரி மகன்கள் மற்றும் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மகன்கள் வசந்தகுமார், ரமணன் மற்றும் கார் ஓட்டுநர் ராஜ்குமார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள ராஜேந்திரபாலாஜியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்படை போலீசார் அவர் இருக்கும் இடத்தை தேடி வருவதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது