shadow

முதல்வரின் உடல்நல குறைவுக்கு காரணம் இதுவா?

appololloமுதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த மாறுபட்ட தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இதுவரை முதல்வர் மருத்துவமனையில் சென்று அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்க டாக்டர் குழுவினர் உள்பட மருத்துவர்கள் போயஸ் கார்டன் வந்துதான் சிகிச்சை செய்து வந்தனர்.

ஆனால் நேற்று முதல்வரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் ஏற்பட்டதற்கு என்ன காரணம்?

இதுகுறித்து போயஸ் கார்டன் உதவியாளர் ஒருவர் கூறுகையில் “முதல்வருக்கு சர்க்கரை குறைபாடு, மூட்டு பிரச்னை என உடல்ரீதியாக பல பிரச்னைகள் உள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே, அமெரிக்க மருத்துவர்கள் குழுவினர் முதல்வருக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். இதன்பின்னர், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பொது இடங்களுக்குச் செல்லும்போதெல்லாம், மிகுந்த கவனமாகவே இருப்பார். நேற்று மாலை கார்டனுக்குள் இருந்த முதல்வருக்கு, டெல்லியில் இருந்து சில தகவல்கள் வந்துள்ளன.

டெல்லி தகவலால் கவலையில் ஆழ்ந்தார் முதல்வர். அதன்பின்னர் சசிகலா மற்றும் அரசு செயலர்களுடன் தீவிரமாக விவாதித்தார். அடுத்துச் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதும் குறித்தும் ஆலோசித்துக் கொண்டிருந்தார். மிகுந்த மனஅழுத்தத்தோடு பேசிக் கொண்டிருந்தார். நீர்ச்சத்து குறைபாட்டோடு சர்க்கரை அளவும் குறைந்துவிட்டது. லேசான காய்ச்சலும் இருந்தது. தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை. மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருப்பதை அறிந்த சசிகலா உள்ளிட்டவர்கள், பதறிப் போய் உடனடியாக அப்பல்லோ மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர்.

வழக்கமாக, ஒவ்வொரு புதன்கிழமையும் சிறுநீரகம் தொடர்பான பரிசோதனையை முதல்வர் மேற்கொள்வது வழக்கம். தொடர்ச்சியான பணிகளின் காரணமாக, இந்த வாரம் பரிசோதனை செய்து கொள்ளவில்லை. அதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. உடல்ரீதியான அனைத்து பரிசோதனைகளும் அப்பல்லோ மருத்துவமனையில் நடந்ததால், தொண்டர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுவிட்டது. ஆனால், முதல்வர் இப்போது நன்றாக இருக்கிறார். விரைவில் முழு நலத்தோடு இயல்புக்குத் திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply