அப்துல்கலாம் மணி மண்டபத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் அவர்களின் மணி மண்டபத்தைத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்கிறார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் சக்தியாகத் திகழ்ந்தவர். விஞ்ஞானியாகவும் இஸ்ரோவில் பணியாற்றியவர். எந்த பேதமும் இல்லாமல் அனைவராலும் நேசிக்கப்பட்ட மகத்தான தலைவராகத் திகழ்ந்த அவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி காலமானார்.
இவரது நினைவைப் போற்றும் விதமாக ராமேஸ்வரம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான பேய்க்கரும்பு என்னும் இடத்தில் 15 கோடி ரூபாய் செலவில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இன்று கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கலாமின் மணி மண்டபத்தை திறந்துவைக்க இருக்கிறார்.
சுமார் 11.30 மணியளவில் கலாம் மணி மண்டபத்திற்கு வரும் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்த பின், மணி மண்டபத்தை திறந்து வைக்கிறார். பின்னர், ராமேஸ்வரம் முதல் டெல்லி வரை செல்லும் ‘அப்துல்கலாம்-2020’ என்ற பிரசார வாகனத்தையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து, இந்திய கடலோரக் காவல்படையின் மற்றொரு நிகழ்வில் பங்கேற்கும் மோடி, ராமேஸ்வரம் – அயோத்தி இடையே புதிய ரயில் சேவையையும், ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் தொடங்கிவைக்கிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.