shadow

தமிழகத்தில் இன்று 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்து வைக்க உள்ள நிலையில் இந்த கல்லூரிகள் விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.4000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ கல்லூரிகள் மூலம் வருடத்திற்கு 1450 புதிய எம்பிபிஸ் சீட்டுக்கள் மாணவர்களுக்கு கிடைக்கும்.

இந்த கல்லூரிகள் திறக்கப்பட்டால் தமிழகத்தில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 5750 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது