shadow

பிரதமர் மோடி திடீர் உண்ணாவிரதம்: பரபரப்பு தகவல்

தமிழகத்தில் காவிரி பிரச்சனைக்காக முதல்வர் உண்ணாவிரதம் இருந்தது போல பாராளுமன்றம் முடக்கத்தை கண்டித்து பிரதமர் மோடி வரும் 12-ம் தேதி உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தொடர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, எஸ்.சி.,எஸ்.டி. சட்ட தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம், வங்கிக் கடன் மோசடி, போன்ற பல பிரச்சனைகளால் முடங்கியது. 23 நாட்களும் பாராளுமன்றத்தில் எந்த பணியும் நடைபெறாமல் முடங்கியதை கண்டித்து பாஜகவினர் வரும் 12ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த உண்ணாவிரதத்தில் மோடி கலந்து கொண்டபோதிலும் அவர் தன்னுடைய அலுவலகத்தில் வழக்கமான பணிகளை கவனிப்பார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply