‘சோ’ மறைவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்
பத்திரிகையாளரும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமாகிய சோ அவர்களின் மறைவிற்கு மோடி தன்னுடைய டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சோ அவர்கள் வெளிப்படை தன்மையுடன் பழகக்கூடிய குணம் உடையவர் என்றும், மிகச்சிறந்த அறிவாளி என்றும் அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
சிறந்த தேசியவாதி, பன்முகத் தன்மை உடையவர், பயமின்றி பேசக்கூடியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ள பிரதமர், எல்லாவற்றிற்கும் மேலாக சோ ராமசாமி தனது நீண்டகால நெருங்கிய நண்பர் என்றும் டுவிட்டரில் குறிப்பிட்டுளார்.
சோ அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், துக்ளக் வாசகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.