shadow

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி மே 16ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்தார்.

மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் போராட்டத்தை நடத்தியதால் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்று கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து நேற்று பேட்டியில் கூறிய அமைச்சர் செங்கோட்டையன், ”மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் நடத்தி வந்த பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு போராட்டம் சரிசெய்யப்பட்டுவிட்டது. எனவே பிளஸ்-2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 16-ந் தேதி வெளியிடப்படும். இந்த ஆண்டும் எஸ்.எம்.எஸ். மூலமும் தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம். இதற்காக மாணவர்களின் செல்போன் எண்களை வாங்கிவைத்துள்ளோம். என்று கூறினார்.

மேலும் கோடைகால விடுமுறையின்போது பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்தவர்கள் தவிர, வேறு எந்த வகுப்பு மாணவர்களுக் கும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. இந்த உத்தரவை மீறி யாராவது செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply