தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சற்று முன்னர் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முடிவின்படி தமிழகம், புதுச்சேரியில் 92.1 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 93% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
பிளஸ்-2 தேர்வில் 89.3% மாணவர்களூம், 94.5% மாணவிகளும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். எனவே வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிக உள்ளது.
187 பேர் இயற்பியல் பாடத்தில் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் வணிகவியல் பாடத்தில் 8301 பேர்களும், கணக்கு பதிவியல் பாடத்தில் 5597 பேர்களும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.