shadow

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: பிளே ஆப் சுற்றில் மோதும் அணிகள் எவை எவை?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் தற்போது கிளைமாக்ஸை எட்டியுள்ளது.

நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்து போட்டியில் இருந்து வெளியேற்றியது புனே அணி. அதுமட்டுமின்றி நான்காவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

எனவே தற்போதைய நிலவரப்படி மும்பை, புனே, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் முதல் நான்கு இடங்களை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

நாளை நடைபெறும் முதல் பிளே ஆப் போட்டியில் மும்பை மற்றும் புனே அணிகள் மோதும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கும் தோல்வி அடையும் அணி இரண்டாவது பிளே ஆப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடனும் மோதும். வரும் 21ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவுள்ள இறுதி போட்டியில் வெல்வது யார்? என்பதை இன்னும் சில நாட்கள் மட்டும் பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply