shadow

மாணவிகளுக்கு மாதம் ₨1,000 வழங்கும் திட்டம்

அரசு பள்ளிகளில் படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ₨1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

இன்று முதல் 30ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் மூலம் மாணவிகள் பெயர்களை பதிவு செய்யலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆதார், வங்கி கணக்கு விவரம், கல்வி சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் பதிவேற்ற உத்தரவிட்டுள்ளது.

//penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் மாணவிகள் பதிவு செய்யலாம்.