ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மருத்துவமனையில் அனுமதி
மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று மும்பை புறநகர் ரெயில் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் பின்னர், ரெயில்வே அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
ஆய்வு நடந்து கொண்டிருந்தபோதே திடீரென தனக்கு பதற்றமாக இருப்பதாக பியுஷ் கோயல் கூறியதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்சில் பியுஷ் கோயல் ஏற்றப்பட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அமைச்சரின் உடல்நிலை நன்றாக இருப்பதாக ரயில்வே உயரதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆய்வின் போது திடீரென ரயில்வே அமைச்சருக்கு உடல்நலக்குறைவானதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Leave a Reply
You must be logged in to post a comment.