shadow

தமிழக மீனவர்கள் ஒருபக்கம் இலங்கை கடற்படையினர் தாக்கி வரும் நிலையில் இன்னொரு பக்கம் கடல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யம் அருகே நேற்று தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் புஷ்பவனத்தை சேர்ந்த 3 மீனவர்கள் காயம் அடைந்தனர். மேலும் கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி 200 கிலோ வரை ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.