டெல்லி முதல்வருக்கு பினராயி விஜயன் எழுதிய முக்கிய கடிதம்

டெல்லியில் பணிபுரியும் ஒரு சில கேரளா நர்சுகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளது இதனை அடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்

அந்த கடிதத்தில் டெல்லியை பணிபுரிந்து கொண்டிருக்கும் கேரள நர்சுகள் ஒரு சிலருக்கு கொரோனா இருப்பதாக அறிந்தேன். இதனை அடுத்து அவர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொள்வதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு அவர்களது சிகிச்சைக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு தான் வலியுறுத்துவதாகவும் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்

இது குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பதில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply