shadow

29

பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 10 நாள் விழா கொண்டாடப்படுகிறது. நேற்று காலை, 10:20 மணிக்கு, மூஷிக படம் வரையப்பட்ட கொடி, கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது.சிறப்பு பூஜைகளுக்குப் பின், 11:05 மணிக்கு, கொடியேற்றம் நடந்தது. கொடி மரத்திற்கு, சிறப்பு பூஜை மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. நாளை முதல் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கும். விழாவின் உச்சகட்டமாக, 17ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா, விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

Leave a Reply