தவறான மருந்து கொடுத்ததால்தான் ஜெ.மரணம். பி.எச்.பாண்டியன் அதிர்ச்சி தகவல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தேகத்தை எழுப்பி வந்தபோதிலும் தமிழக அரசு இதுகுறித்து மெளனம் காத்து வந்த நிலையில் தற்போது முதல்முறையாக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் இதுகுறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய பணியில் உள்ள சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் அவருடைய விசாரணை அறிக்கைக்கு பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில் தவறான மருந்தை தந்ததால் ஜெயலலிதா இறந்ததாக பிரபல பத்திரிகை இந்தியாடுடே கூறியுள்ளதாக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அவர்கள் திடுக்கிடும் தகவல் ஒன்றையும் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.