shadow

பேரறிவாளனுக்கு திடீர் உடல்நலக்குறைவு. மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டு வருவதால் அவ்வப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பேரறிவாளனுக்கு இன்று காலை திடீரென மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, வேலூர் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. வேலூர் மருத்துவமனையில் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் கண்பார்வைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பேரறிவாளன் சிகிச்சை பெற்று வருவதையொட்டி வேலூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் சிகிச்சை முடிந்து இன்று அல்லது நாளை மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்து செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply