தேவாலயத்தை இடிக்க வந்த அரசு அதிகாரிகள்: தீக்குளிக்க முயன்ற பாதிரியாரால் பரபரப்பு

சென்னையை அடுத்த குரோம்பேட்டை என்ற பகுதியில் நீதிமன்ற உத்தரவுபடி தேவாலயத்தை இடிக்க அரசு அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்தபோது அதனை தடுப்பதற்காக பாதிரியார் ஒருவர் தன்னுடைய உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

சென்னையை அடுத்த குரோம்பேட்டை துர்கா நகர் என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தேவாலயம் ஒன்று இருந்தது. இது குறித்த வழக்கில் சென்னை நீதிமன்றம் அந்த தேவாலயத்தை அகற்ற உத்தரவிட்டது

இந்த நிலையில் அந்த தேவாலயத்தை அகற்ற தாசில்தார் உள்பட அரசு அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்றனர் ஆனால் அந்த தேவாலயத்தை இடிக்க அந்த பகுதியில் கிறிஸ்தவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் இது குறித்து நீதிமன்றத்தில் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளதால் இடிக்கக் கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் பாதிரியார் ஒருவர் திடீரென தன்னுடைய உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply