shadow

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பிறருக்கு தொல்லை தரும் வகையில் சத்தமாக பாட்டு கேட்டாலோ அல்லது சத்தமாக செல்போனில் பேசினாலோ அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளதை அடுத்து ரயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக புகார் அளிக்கலாம் என்றும், அவ்வாறு அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக ரயில்வே போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரயில் பணிகளின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் ரயிலில் இரவு 10 மணிக்கு மேல் விளக்குகள் எரிய கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.