shadow

ஜெயலலிதாவை பழ.நெடுமாறன் திடீரென பாராட்டியது ஏன்?

pazha.nedumaranதமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர்ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்து வருகின்ரனர். இந்நிலையில் நேற்று தேர்தல் பிரச்சார உரையில் தனித் தமிழீழம் அமைவதற்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவிப்பதாக பேசினார். ஜெயலலிதாவின் இந்த பேச்சுக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெடுமாறன் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

தனித் தமிழீழம் அமைவதற்கும், அங்கு தமிழர்கள் முழுமையான சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கும் தொடர்ந்து பாடுபடப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதை மனமாற வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதின் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிகாண முடியும் என்பதுதான் தனது அரசின் நிலைப்பாடாகும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.இலங்கையில் முற்றிலும் அமைதி நிலவி, தமிழர்களுக்குப் பாதுகாப்பு நிலவும் சூழ்நிலை உருவானால்தான் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளை அங்கு திருப்பி அனுப்பவேண்டும் என்பதுதான் தனது அரசின் நிலைப்பாடு என்று ஜெயலலிதா அறிவித்திருப்பதையும் தமிழர்கள் அனைவரும் வரவேற்றுப் பாராட்டுவர் என்பதில் ஐயமில்லை

இவ்வாறு பழநெடுமாறன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply