shadow

நடுவானில் உயிர்விட்ட டெல்லி பயணி. சக பயணிகள் அதிர்ச்சி

flightதலைநகர் புதுடெல்லியிலிருந்து தோகாவுக்கு புறப்பட்டு சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்றில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது. அவருக்கு விமான நிறுவன ஊழியர்கள் முதலுதவி செய்தபோதிலும் பலனில்லாமல் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் சக பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இன்று அதிகாலை டெல்லி விமான நிலையத்தில் இருந்து கத்தார் தலைநகர் தோகாவிற்கு ஜெட் ஏர்வேஸ் 9W 202 என்ற விமானம் கிளம்பியது. இதில் பயணம் செய்த பயணி ஒருவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த பொழுது, திடீரென உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நினைவிழந்தார். உடனே அவருக்கு முதலுதவி கொடுத்தவுடன் மேல்சிகிச்சைக்காக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் விமானத்தை விமானிகள் தரையிறக்கினர்.

விமான நிலையத்தில் தயாராக காத்திருந்த மருத்துவர்கள் அந்த பயணியை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த பயணியின் உடல் டெல்லிக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக விமான சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply