shadow

பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் கதை என்ன?

1கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை அடுத்து பிரபல இயக்குனர் பார்த்திபன் இயக்கவுள்ள படமான ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த பிரஸ்மீட்டில் பார்த்திபன் கூறியபோது, ‘திரையுலகில் நுழையும்போது தனது வாழ்க்கை கோடிட்ட இடங்களாக இருந்ததாகவும், அந்த இடத்தை நிரப்பிய குருநாதர் பாக்யராஜ் அவர்களின் மகனுக்கு இந்த படம் அவருடைய வாழ்க்கையின் கோடிட்ட இடங்களை நிரப்பும் வகையில் இருக்கும் என தான் நம்புவதாக கூறினார்.

மேலும் இந்த படம் ‘பிழைகளை கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அந்த பிழை ஒரு காதலாக இருக்கலாம், அல்லது வாழ்க்கையாக இருக்கலாம் அல்லது அதற்கும் மேலான ஒன்றாகவும் இருக்கலாம்…. அது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்கரு’ என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் பெண்ணின் உதடு இருந்தாலும் இந்த படத்தில் முத்தக்காட்சிகள் எதுவும் இல்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.,

Leave a Reply