shadow

சசிகலாவுக்கு பரோல் கேட்டு விண்ணப்பம்: தினகரன் தகவல்

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலமின்றி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் கணவரை பார்க்க அனுமதிக்க கோரி சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பம் செய்வார் என்று செய்திகள் வெளிவந்தது. இதுகுறித்து தினகரன் கூறியபோது, ‘ “நடராசனின் உடல்நிலையில் முன்பைவிட தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் வெண்டிலெட்டலர் உதவியுடன் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலாவுக்கு பரோல் பெறுவதற்காக வழக்கறிஞர்கள் பெங்களூரு சிறைக்கு சென்றுள்ளனர். இன்று பரோல் வழங்க கோரி மனு அளிக்கப்படும்” என்று கூறினார்.

சசிகலாவின் கணவர் நடராசனுக்கு சமீபத்தில் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறு ஏற்பட்டதாஅல் அவருக்குச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply