shadow

jennifer-aniston-paparazzo-arrestபிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டனை அமெரிக்காவில் உள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றில் புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனால் ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

45 வயதான ஜெனிபர் அனிஸ்தான், நடிகை ஏஞ்சலினா ஜோலியின் கணவர் பிராட் பிட் அவர்களின் முதல் மனைவி ஆவார். கடந்த 2005ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். தற்போது ஜெனிபர் அனிஸ்டன் ஜஸ்டின் தெராக்ஸ் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று காலை சாப்பிட வந்த ஜெனிபர் அனிஸ்டனை விரட்டி விரட்டி ஒரு பத்திரிகையாளர் புகைப்படம் எடுத்துள்ளார். ஜெனிபர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கேட்காமல் தொடர்ந்து அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டெ இருந்ததால் ஜெனிபர் ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் செய்தார். அதன்பின்னர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அந்த பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார்.

ஓய்வு நேரத்தில் சாப்பிட வரும் நேரத்தில் கூட பத்திரிகையாளர் எங்களை நிம்மதியாக இருக்க விடுவதில்லை என்று ஜெனிபர் பத்திரிகையாளர்கள் மீது தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

Leave a Reply