shadow
‘அஞ்சாதே’க்கு பின் மீண்டும் வில்லனாக பாண்டியராஜன்
pandiarajanபுதுமையான இயக்குனர் என்ற பெயரை பெற்ற மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தில் முதன்முதலாக வில்லனாக நடித்தார் நடிகர் பாண்டியராஜன். அதுவரை காமெடி ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த பாண்டியராஜனை மிஷ்கின் மிகவும் வித்தியாசமாக கொடூர வில்லனாக நடிக்கவைத்தார். அந்த படமும் மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை கொடுத்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் வேறு சில படங்களில் பாண்டியராஜன்  நடித்தாலும் வில்லன் வேடம் அவருக்கு மீண்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சாலையோரம்’ என்ற படத்தில் பாண்டியராஜன் மீண்டும் வில்லனாக நடித்து வருகிறார். அஞ்சாதே படத்தை விட இந்த படத்தில் வித்தியாசமான வில்லனாக பாண்டியராஜான் தோன்றுவார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்மைலி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தை  மூர்த்திகண்ணன் என்பவர் இயக்கியுள்ளார்.

Leave a Reply