shadow

இண்டோர் படப்பிடிப்பு இல்லாமல் வெளிவரும் முதல் தமிழ்ப்படம்

100 வருட தமிழ் சினிமா உலகில் முதல்முறையாக முழுக்க முழுக்க 100% அவுட்டோரில் படமாக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை விக்ரம்பிரபு நடித்து வரும் பக்கா’ படம் பெற்றுள்ளது.

இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் S.S.சூர்யா கூறியதாவது: முழு நீள காமெடி படமாக உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ திருவிழாவை பார்த்திருபோம். ஆனால் நாங்கள் ஒரு திருவிழாவையே படமாக எடுத்திருக்கிறோம்.

இன்டீரியல் காட்சிகள் ( சுவற்றிற்குள் ) இல்லாமல் படம் முழுக்க எக்ஸ்டீரியல் என்று சொல்லப்படும் வெளிப் புறங்களிலேயே படமாக்கப்பட்ட முதல் படம் இந்த பக்கா.

கள்ளக்குறிச்சி அருகில் உள்ள செம்படாப்குறிச்சி என்ற ஊரில் ஒரிஜினல் திருவிழாவே நடத்தி இசையமைப்பாளர் சத்யாவை அழைத்துச் சென்று இரவு முழுக்க அவரை பார்க்க வைத்து ஒரு கரகாட்ட சாங்கை கம்போஸ் பண்ணினோம். அந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பேசப்படும் பாடலாக நிச்சயம் இருக்கும்.

குற்றாலம் பக்கத்தில் ஒரு ஆற்றில் 1000 பேரை வைத்து ஆற்று திருவிழாவில் ஒரு வித்தியாசமான காட்சிகளை தத்ரூபமாக படமாக்கினோம். படம் விரைவில் வெளியாக உள்ளது இவ்வாறு இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா தெரிவித்துள்ளார்.

Leave a Reply