பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 போட்டியில் படுதோல்வி அடைந்த மேற்கிந்திய தீவுகள்
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் நேற்று கராச்சியில் முதலாவது டி20 போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பந்துவீச தீர்மானித்ததால் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 203 ரன்கள் குவித்தது.
இந்த நிலையில் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி வெறும் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 143 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டி ஏப்ரல் 3ஆம் தேதி இதே கராச்சியில் நடைபெறவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.