shadow

அதிபர் தேர்தலிலும் வெற்றி பெறுவோம்: இம்ரான்கான் கட்சி அறிவிப்பு

சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக இம்ரான்கானின் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமர் பதவியை ஏற்றுள்ள இம்ரான்கானின் செயல்பாடுகள் திருப்தியாக இருப்பதாக அந்நாட்டு மக்கள் கூறி வரும் நிலையில் விரைவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என இம்ரான்கான் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனின் ஐந்தாண்டு பதவிக்காலம் செப்டம்பர் 9-ம் தேதியுடன் நிறைவடைவதால் அந்த பதவிக்கு செப்டம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் அதிபர் வேட்பாளராக டாக்டர் ஆரிப் ஆல்வி நிறுத்தப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அதிபரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் 4 மாகாணங்களின் சட்டசபை உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், அதிபர் தேர்தல், இம்ரான்கான், போட்டி, டாக்டர் ஆரிப்

Leave a Reply