shadow

நான் மட்டும் ஐபிஎல் ஏலத்தில் இருந்திருந்தால் 200 கோடிக்கு ஏலம் போய் இருப்பேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர் ஷாயின்ஷா அஃப்ரிடி தனது டுவிட்டரில் நான் மட்டும் ஐபிஎல் ஏலத்தில் பங்கு பெற்று இருந்தால் 200 கோடிக்கு ஏலம் போய் இருப்பேன் என ட்வீட் செய்துள்ளார்.

இந்த டுவிட்டை இந்திய ரசிகர்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் உள்ள ஒவ்வொரு அணிக்கும் மொத்தமே 80 கோடிதான் லிமிட் என்பது குறிப்பிடத்தக்கது.