முட்டாள்தனமான முடிவு: மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையை குறை சொன்ன ப. சிதம்பரம்
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்க அரசு எடுத்த முடிவு முட்டாள்தனமானது என்றும் இதுவொரு தவறான நடவடிக்கை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் கூறியுள்ளார்
ஏப்ரல் மற்றும் ஜூன் காலாண்டில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசு சமீபத்தில் குறைத்துள்ளது
இது குறித்து கருத்து கூறிய முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான ப.சிதம்பரம் அவர்கள் தனது டுவிட்டரில் கூறிய போது ’சில நேரங்களில் அரசு முட்டாள்தனமான ஆலோசனையின் பேரில் செயல்படுகிறது என்றும் ஆனால் இந்த அறிவுரை எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறது என்று நினைத்து நான் வியப்படைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்
கடுமையான துன்பம் மட்டும் வருமானம் குறித்த நிச்சயமற்ற காலங்களில் மக்கள் தங்கள் சேமிப்பின் வட்டி வருமானத்தை சார்ந்து இருக்கிறார்கள் என்றும் எனவே அரசு உடனடியாக இதனை மறுபரிசீலனை செய்து ஜூன் 30 வரை பழைய வட்டி விகிதங்களை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
ப.சிதம்பரம் அவர்களின் மத்திய அரசின் இந்த விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.