ப.சிதம்பரத்திற்கு நெட்டிசன்கள் கேள்வி

முன்னாள் மத்திய நிதியமைச்சர் தனது டுவிட்டரில், நாடு முழுவதும் ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் குடியேறிய மக்களுக்கு அந்த வாய்ப்பினை அரசு தர வேண்டும். வேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாட்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடப்பதற்கு யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

தங்கள் சொந்த ஊரில் தங்கள் குடும்பத்துடன் தங்கள் மொழி பேசும் மக்களிடையே இருக்க வேண்டும் என்ற உணர்வை ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்? என்று பதிவு செய்துள்ளார்.

ப.சிதம்பரம் அவர்களின் இந்த டுவிட்டுக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இப்போது சொந்த ஊருக்கு செல்வது தன முக்கியமா? கொரோனாவில் இருந்து மக்களின் உயிரை காப்பாற்றுவது முக்கியமா? என்ற கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply