shadow

world cup cricket 201550 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 14–ந்தேதி முதல் மார்ச் 29–ந்தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடக்கவிருக்கின்றது.  இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நேற்று அறிவித்தது. மேலும் வரும் உலக கோப்பை போட்டியில் ‘நாக்அவுட்’ சுற்றில் சூப்பர் ஓவர் என்ற முறையை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

லீக் போட்டிகள் மற்றும் கால்இறுதி, அரை இறுதி போன்ற ஆட்டங்கள் டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்படட மாட்டாது. குரூப் ஆட்டத்தில் அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

ஆனால் அதே நேரத்தில் இறுதி ஆட்டம் ‘டை’யில் முடிந்தாலோ அல்லது மழையால் பாதிக்கப்பட்டு நடைபெற முடியாமல் போனாலோ இரு அணிகளுக்கும் இணைந்து கூட்டாக கோப்பை அளிக்கப்படும்.

உலககோப்பை போட்டியில் நடைபெறும் 49 ஆட்டமும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை பின்பற்றப்படும். இந்தப்போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.60 கோடியாகும்.

2015–ம் ஆண்டு உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.23.85 கோடி பரிசாக வழங்கப்படும். அதே நேரத்தில் தோல்வி எதையும் சந்திக்காமல் கோப்பையை வென்றால் ரூ.24 கோடி வழங்கப்படும். 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10½ கோடியும், அரை இறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா 3.6 கோடியும், கால் இறுதியில் தோற்கும் 4 அணிகளுக்கு தலா ரூ.1.8 கோடியும் வழங்கப்படும்

Leave a Reply