shadow

நடராஜன் செய்யும் சேட்டை நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். ஓபிஎஸ்


தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க துடிக்க அவரது கணவர் நடராஜன் தான் முக்கிய காரணம் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் நடராஜன் செய்யும் சேட்டை நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

இதுநாள் வரை அமைதியாக இருந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென சசிகலாவுக்கு எதிராக கொதித்தெழுந்து அவ்வப்போது அதிரடி பேட்டிகளை கொடுத்து வருகிறார். செய்தியாளர்களிடம் அவர் சசிகலா குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார்.

இந்நிலையில் சசிகலா கணவர் கணவர் நடராஜன் குறித்து பன்னீர் செல்வம் கூறுகையில்,’ நடராஜனின் இடையூறு எந்த அளவிற்கு உள்ளது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க உள்ளதாகவும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நிச்சயம் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்,’ என்று கூறினார்.

Leave a Reply