எதை கொண்டு வந்தோம் இழப்பதற்கு! முதல்வர் பதவி பறிபோனது குறித்து ஓபிஎஸ்
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்து ஒருவருடம் முடிந்துவிட்ட நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்வியை கேட்ட நிருபரை பாராட்டிய ஓபிஎஸ், ‘எதை கொண்டு வந்தோம், இழப்பதற்கு’ என்று தத்துவார்த்தமான பதிலை புன்னகையுடன் கூறினார்.
மேலும் தமிழகத்தில் அதிமுக வலுவான அஸ்திவாரத்துடன் இருப்பதாகவும், ஏழரை கோடி மக்களும், ஒன்றரை கோடி தொண்டர்களும் இருக்கும் வரை அதிமுக என்ற எஃகு கோட்டையை யாராலும் அசைக்க முடியாது என்றும் மேலும் ஒரு கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளித்தார்.
மேலும் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்வதாகவும், இந்தியாவிலேயே வன்முறை அதிகம் இல்லாத மாநிலம் தமிழகம் தான் என்றும் கூறினார். மேலும் தமிழகம் போதுமான அளவு வளர்ச்சி அடைந்துவிட்டதை காரணம் காட்டியே மத்திய அரசு அதிக நிதி தர மறுப்பதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.