shadow

சென்னை: எதையும் தாங்கும் இதயம்: டெல்லி பயணம் குறித்து ஓபிஎஸ்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று டெல்லி சென்றிருந்தபோது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க இயலவில்லை. அவருக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அப்பாயின்மெண்ட் கொடுக்கவில்லை. அதிமுக எம்பி மைத்ரேயனை மட்டுமே நிர்மலா சீதாராமன் சந்தித்தார். இதனால் துணை முதல்வர் ஓபிஎஸ் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார்.

ஒரு துணை முதல்வரை மத்திய அமைச்சர் சந்திக்க மறுத்தது ஒரு பெரிய அவமதிப்பு என்று கூறப்பட்டு வரும் நிலையில் சென்னை விமான நிலையத்தில் இதுகுறித்து ஓபிஎஸ் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், ‘சென்னை: எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அறிஞர் அண்ணா எங்களுக்கு சொல்லி கொடுத்திருக்கின்றார்’ என்று மட்டும் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

முன்னதாக டெல்லியில் பேட்டியளித்த ஓபிஎஸ், ‘தனது டெல்லி பயணம் முழுக்க முழுக்க தனிப்பட்ட பயணம் என்றும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தன்னுடைய சகோதரர் மதுரையில் இருந்து சென்னை வருவதற்கு ராணுவ விமானம் அளித்து உதவி செய்ததற்கக நன்றி தெரிவிக்க மட்டுமே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply