துணை முதல்வருடன் பொது-உள்துறை இலாகா: ஓபிஎஸ்-க்கு வழங்க ஈபிஎஸ் சம்மதம்?
கடந்த சில மாதங்களாக அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து இரண்டு தரப்பிலும் பேசிக்கொண்டிருந்தாலும் ஒருசிலரின் முட்டுக்கட்டையால் இரு அணிகளும் இணைவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் தினகரன்ம் ஆட்சிக்கு கொடுத்த நெருக்கடி காரணமாக, சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து தள்ளி வைக்க, இரு அணிகளின் இணைப்பு அவசியம் என்பதை இரு அணியினர்களும் உணர்ந்தனர்.
இந்த நிலையில் இரு அணிகள் இணைப்பு நேற்று உறுதியானதாக செய்தி வெளிவந்தது. ஓபிஎஸ் அவர்களுக்கு துணை முதல்வர் பதவியும் அவரது அணியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி தர முதல்வர் ஈபிஎஸ் தரப்பு ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளிவந்தது.
இந்த நிலையில் துணை முதலமைச்சர் பதவியுடன், பொது மற்றும் உள்துறை இலாகாக்களை தர பழனிசாமி அணியிடம் பன்னீர் செல்வம் அணி கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதற்கும் முதல்வர் பழனிச்சாமி ஒப்புக்கொண்டதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.