40% பேருந்துகள் உண்மையில் இயக்கப்படுகிறதா? அரசுக்கு அதிகாரிகள் பொய்க்கணக்கு என குற்றச்சாட்டு
தமிழகத்தில் கடந்த மூன்றாவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. இந்த நிலையில் இன்று 40% பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இது பொய்க்கணக்கு என்றும், பணிமனைகளில் இருந்து பேருந்துகளை கொண்டு வந்து பேருந்து நிலையத்தில் மட்டுமே நிறுத்திவிட்டு அவை இயக்கப்படுவதாக கூறப்பட்டு வருவதாகவும், மேலும் ஒரு வழித்தடத்தில் ஓடும் பேருந்துகளை பல வழித்தடங்களில் ஓடுவது போல் கணக்கு காட்டி அரசை அதிகாரிகள் ஏமாற்றி வருவதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
உண்மையில் தமிழகத்தில் 10% பேருந்துகள் மட்டுமே ஓடுவதாகவும், இந்த பிரச்சனையை தீர்க்க அரசு தங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.