வெங்காயத்தை பாதுகாக்க செக்யூரிட்டி: உருட்டுக்கட்டை,அரிவாளுடன் பாதுகாப்பு குழுவினர்
வெங்காயத்தின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உள்ளதால் தங்கம், வைர நகைகளை கொள்ளையடிப்பதற்கு பதிலாக வெங்காயத்தை கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் அதிகரித்துவிட்டனர். தினந்தோறும் வெங்காயம் கடத்தல், வெங்காயம் திருட்டு செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் நாடு முழுவதிலும் பல இடங்களில் வெங்காயம் மிகவும் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ள புகைபடங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் வெங்காயம் விளைச்சலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது பயிரை 24 மணி நேரமும் கண்காணிக்க பாதுகாவலர்களை ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள் தங்கள் கையில் உருட்டுக்கட்டை, அரிவாள் உள்ளிட்ட பொருட்களுடன் வெங்காயத்தை பாதுகாத்து வருகின்றனர்.
விலை ஏற்றத்தால் தங்களது நிலத்தில் பயிரிட்டுள்ள வெங்காயத்தை திருடர்கள் திருடி விடுவார்களோ என்ற பயத்தில் பகலிலும், இரவிலும் வெங்காய பயிர் நிலத்தில் பாதுகாவலர்கள் சுற்றி வருகின்றனர் என்பது அனைவருக்கும் ஒரு புதுமையான செய்திதான்
Leave a Reply
You must be logged in to post a comment.