shadow

அஸ்வினுக்கு கிடைத்த மேலும் ஒரு கேப்டன் பதவி

தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சமீபத்தில் பஞ்சாப் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் தியோதர் கோப்பை தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற போட்டிகளில் ஒன்று தியோதர் கோப்பை கிரிக்கெட் தொடர். இம்மாதம் 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ள இந்த தொடருக்கான அணிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் இந்தியா ஏ அணியின் கேப்டனாக முன்னணி சுழல்பந்து வீச்சாளர் அஷ்வினும், இந்தியா பி அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ர். 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை அணியில் விளையாடிய பிரித்வி ஷா, ஷுப்மான் கில் இருவருக்கும் இந்தியா ஏ அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஈரானி கோப்பை போட்டியில், ரஞ்சி கோப்பை சாம்பியன்களான விதர்பாவை எதிர்கொள்ள இருக்கும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டனாக கருண் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டி மார்ச் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

Leave a Reply