shadow

பாகிஸ்தான் மீது மீண்டும் சர்ஜிக்கல் அட்டாக். ராணுவ தளபதி பிபின் ராவத்

சமீபத்தில் பாகிஸ்தான் எல்லையில் சர்ஜிக்கல் அட்டாக் நடத்திய இந்திய ராணுவம், தேவைப்பட்டால் மீண்டும் ஒரு சர்ஜிக்கல் அட்டாக்கை நடத்த தயங்காது என்று ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

இந்திய ராணுவத்தின் 27வது தளபதியாக பிபின் ராவத் கடந்த சனிக்கிழமை டெல்லியில் பதவியேற்றார். முந்தைய தளபதி தல்பீர் சிங் சுஹாக் கோலி அதற்கான பொறுப்பை நேற்று முறைப்படி ஒப்படைத்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பிபின் ராவத் இந்திய ராணுவத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்ற பின்னர் ராணுவ வீரர்களிடையே பேசியபோது, ‘தேவைப்பட்டால் பாகிஸ்தான் மீது மீண்டும் ஒரு சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்படுவதை தவிரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த சர்ஜிகல் தாக்குதல் பாகிஸ்தானுக்கு அனுப்பும் செய்தி ஆகும். எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply