கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர் மரணம்: இந்தியாவில் 3வது பலியா?
கொரானா வைரஸ் காரணமாக ஏற்கனவே பெங்களூரில் உள்ள 76 வயது முதியவர் ஒருவரும் டெல்லியில் உள்ள 65 வயது பெண் ஒருவரும் மரணம் அடைந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா பாதிப்பால் மும்பை கஸ்தூரிபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 64 வயது நபர் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளதாகவும் இதனையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்க்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளதால் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.