இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்தவும் சலுகை: அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மக்களின் வருமானம் இன்மையை கணக்கில் கொண்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது

ஏற்கனவே இந்த மாதம் வாடகை வாங்க கூடாது என்று வீட்டு உரிமையாளருக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில், கிரெடிட் கார்டு தவணை கட்டவும் சலுகை அளித்து உள்ளது

இந்த நிலையில் மேலும் ஒரு சலுகையாக இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்ட ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது

மார்ச் மாதம் கட்ட வேண்டிய இன்சூரன்ஸ் பிரிமியம் ஏற்கனவே ஒரு மாதம் சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மாதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது

இந்த ஒரு மாதத்திற்கு எந்தவிதமான வட்டியும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் இன்சுரன்ஸ் பிரிமியம் கட்டுபவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

எல்ஐசி மற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்பட அனைவரும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply