shadow

வீட்டின் சமையலறையில் சாராயம் காய்ச்சியவர் கைது

மது வாங்க பணம் இல்லாததால் வீட்டின் சமையலறையில் சாராயம் காய்ச்சிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கோவையை சேர்ந்த கூலித்தொழிலாளி வெள்ளியங்கிரி என்பவரும் சாராயம் வாங்க பணம் இல்லாததால் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி உள்ளார்

அவர் மது வாங்க பலரிடம் கடன் கேட்டதாகவும் ஆனால் யாரும் அவருக்கு கடன் தரவில்லை என்பதால் வீட்டிலேயே சாராயம் காய்ச்சியதாகவும் கூறப்படுகிறது

சாராயம் காய்ச்சிய போது ஏற்பட்ட நச்சுவாடை காரணமாக அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த ஒரு லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது.