டெல்லி கங்காராம் மருத்துவமனையில் மீண்டும் சோனியா காந்தி அனுமதி
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 2ஆம் தேதி வாரணாசியில் பிரசாரம் செய்த போது திடீரென அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சலுக்கு சிகிச்சையும், தோள்பட்டை வலிக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஆகஸ்ட் 14ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் வீடு திரும்பினார்
இந்நிலையில் அறுவை சிகிச்சையின் போது போடப்பட்ட தையல்களை பிரிப்பதற்காக சோனியா காந்தி நேற்று முன்தினம் மீண்டும் கங்காராம் மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு மீண்டும் சில பிரச்சனைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அதே மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
இன்னும் இரண்டு நாட்கள் அவர் கங்காராம் மருத்துவமனையில் 2 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பின்னர் அவர் வீடு திரும்புவார் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சோனியா காந்தி பூரண குணமடைய நாடெங்கும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.