shadow

புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஆகிறார் ஓம்பிரகாஷ் ராவத்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வரும் அச்சல்குமார் ஜோதி வரும் திங்கட்கிழமையுடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து அடுத்த தலைமை தேர்தல் அதிகாரி யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அவர்கள் பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அவர்கள் அடுத்த வாரம் பொறுப்பேற்பார் என்றும், நாகலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய மூன்று மாநில தேர்தல் அவரது மேற்பார்வையில் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply