ஓபிஎஸ் மேடையில் கொடுத்த பரிசை மாணவர்களிடம் இருந்து கீழே பறித்த அதிகாரிகள்
தேனி மாவட்டத்தில் கட்டுரை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஒன்றில் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். மாணவர்களுக்கு தனது கையால் அவர் பரிசளித்தார்.
ஆனால் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தேவையான பரிசு இல்லை என்பதால் மேடையில் இருந்து பரிசு பெற்று வந்த மாணவர்களிடம் இருந்து பரிசை பறித்து கொண்ட அதிகாரிகள் மீண்டும் மேடைக்கு அனுப்பி அதே பரிசை பிற மாணவர்களுக்கு கொடுத்தனர். இதனால் பரிசை இழந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பரிசினை திரும்ப பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் பரிசு அவரவர் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்,.
Leave a Reply
You must be logged in to post a comment.