shadow

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ஆம் தேதி 9 மாவட்டங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் அக்டோபர் 9ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் இரு கட்டங்களாக நடைபெற உள்ள தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய 28 மாவட்டங்களில் அக்டோபர் 9ம் தேதி அன்று நடைபெற உள்ள தற்செயல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது