shadow

ஒபாமா இதை முதல்லேயே செய்திருந்தால் ஹிலாரி ஜெயிச்சிருப்பாங்களே…

அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று அனைத்து கருத்து கணிப்புகளும் கூறியிருந்தன. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் முறைகேடு செய்ததாக ஒபாமா குற்றஞ்சாட்டி இருந்தார். அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் இமெயில்களை ஹேக் செய்தது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை ரஷ்ய அதிபர் புதின் சம்மதத்துடன்தான் அந்நாட்டு உளவுத்துறை மேற்கொண்டுள்ளதாக தற்போது அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதனால் அதிபர் தேர்தலில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து அந்நாட்டு அதிகாரிகள் 35 பேரை அமெரிக்கா அதிரடியாக நீக்கம் செய்துள்ளது. மேலும் தூதரக அதிகாரிகள் 35 பேரை அவர்களது குடும்பத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேற 72 மணி நேரம் அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த நடவடிக்கையை ஒபாமா தேர்தலுக்கு முன் செய்திருந்தால் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றிருப்பார் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply