shadow

வங்கி, தபால் நிலையம் மட்டுமின்றி பிக்பஜாரிலும் பணம் பெறலாம்

1500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறும் அறிவிப்பை தொடர்ந்து புதிய நோட்டுக்கள் வங்கிகள், தபால் நிலையங்களில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகி 15 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ஒருசில இடங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி வங்கியில் பழைய நோட்டுக்களை டெபாசிட் செய்தவர்கள் மீண்டும் பணம் எடுப்பதிலும் பிரச்சனை உள்ளது. ஏ.டி.எம் சரியாக இயங்காததே இதற்கு காரணம்.

இந்நிலையில் டெபிட் கார்டுகள் மூலம் பிக் பஜாரில் பணம் பெறலாம் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதன்படி, இந்தியா முழுவதும் உள்ள பிக்பஜார்களில் வருகின்ற நாளை முதல் அதாவது நவம்பர் 24-ஆம் தேதி முதல் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ரூ.2,000 பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல் பங்க்குகளில் பணம் பெறலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அம்பானியின் பிக்பஜார் இந்தியாவின் 115 முக்கிய நகரங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply